திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் நெல்லையை சேர்ந்த மகாராஜன் (32) என்பவர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) காலை அவர் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வனராஜ் (28) என்பவரது பைக் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் உயிர் இழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









