சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக கூறிய அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.








