தூத்துக்குடி மாநகராட்சி மண்டல முகாமானது நிர்வாக காரணங்களினால் வருகின்ற புதன்கிழமைக்கு பதிலாக அதற்கு அடுத்த தினமான வியாழக்கிழமை (8.8.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மேற்படி தினத்தில் வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு வடக்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 1 முதல் 14 மற்றும் 20) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.









