ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கோடை வெயிலுக்கு நடுவே திடீர் மழை பெய்ததால் சிறுவர்கள் மழையில் குத்தாட்டம் போட்டும், கிரிக்கெட், கண்ணாமூச்சி விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென மதியத்திற்கு மேல் மழை இடியுடன் கூடிய மழை பெய்து வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வெயிலில் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் சிறுவர்கள் அனைவரும் மழையில் குத்தாட்டம் போட்டும், கிரிக்கெட் விளையாடியும், கண்ணாமூச்சி விளையாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.