தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய 442-வது ஆண்டு பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் ஆகியோர் கன சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அமைச்சர் கீதாஜீவன் அங்கு சென்று வழிபட்டார்.









