தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சற்று முன்பு திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குடிநீர் வடிகால் வாரிய மற்றும் நகராட்சி அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பு குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தி, விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் .








