ஏரல் அருகே உள்ள நட்டாத்தியில் சுமார் 7 ஏக்கர் நிலத்தை சமன் செய்வதற்காக கனிம சலுகை விதி 44ன் (1959) கீழ் அனுமதி பெற்று, சட்ட விரோதமாக செங்கல் சூளைகளுக்கு மண் கடத்துவதாக நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க தலைவர் புதுக்குடி ராஜா மற்றும் நட்டாத்தி ஊர் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், ‘மேஜிக் பென்’ மூலம் நடைச் சீட்டைத் திருத்தி, ஒரு நடைக்கு பதிலாக ஏழு நடை வரை மண் கொண்டு செல்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.








