பிரபல சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 78.
இவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றியவர்.கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினையும் சமீபத்தில் பெற்றார்.
நோய் தாக்கத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டவர், இன்று தனது வீட்டில் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.