தூத்துக்குடி அசோக்நகர் 8ஆவது தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ரவி (50). இவருக்கு மாலா (49) என்ற மனைவியும் இருமகன்கள், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் படித்து வருகின்றனர். மகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்திருந்தது. ரவி வீட்டுக்கு சூசை மச்சாது என்ற கொடுக்கல் வாங்கல் தொழில் செய்யும் ந(ண்)பர் ஒருவர் அடிக்கடி வந்துசெல்வார். குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகிவந்தார். ரவி மகள் திருமண செலவுக்கு கூட அவர் உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், ரவிக்கு மனைவி நடத்தையில் சந்தேகம் இருந்தது. மகள் திருமணத்தில் கூட தன்னை முதன்மைப்படுத்தவில்லை என்ற வருத்தமும் இருந்தது. இன்று காலை வீட்டுக்கு வந்தவர், வீட்டில் பேசிக்கொண்டிருந்த மாலா, சூசை மச்சாது முகத்தில் பெயிண்டடில் கலக்கும் ஆசீடை வீசினார். அப்போது ரவியை அழைக்க வந்த அவரது மகன் கெல்வின் மீதும் ஆசீட் வீசப்பட்டது, மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.