மைசூருவில் விஜயதசமியையொட்டி உலக புகழ் பெற்ற தசரா பண்டிகை நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, மைசூரு அரண்மனையில் யானைகளின் அணிவகுப்பு நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது.
இதற்காக கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளாவில் ருந்தும் யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தசராவில் யானை அணிவகுப்பு தனிக்கவனம் பெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறினர்.












