கடந்தகாலம் போலன்றி தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலம் நெகிழ்ந்து பார் குளிர்ந்துள்ளது. இதனால் கரிசல் நிலத்தில் சரியாக அஸ்திவாரம் அமைத்து கட்டப்படாத வீடுகள் சரிவதும், சுவர்கள் இறங்குவதும் நிகழ்கிறது.
மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் அம்பாசிடர் லாட்ஜ் பின்புறம் ஒரு வீடு தரையில் இறங்கி ஆபத்தான நிலையில் உள்ளது.















