மாட்டுக்கு இரை வைத்தவர் மின்னல் தாக்கி பலி

0
860

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா

பெருங்குடியை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகன் பாலு (31). கட்டடத்தொழிலாளி. இவர், வீட்டின் அருகே பசுமாட்டிற்கு வைக்கோல் வைத்துக்
கொண்டிருந்தபோது, திடீரென இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.அவரது மாடும் சம்பவ இடத்திலேயே மடிந்தது .


இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீஸார் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here