கோவை,
கோவை கரும்புகடை பகுதியில் நேற்று இரவு வேகமாகச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று இளைஞா் மீது மோதியது. இதில் அவா் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த இருவரில் ஒருவா் அங்கிருந்து தப்பி ஓடினாா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில் பல மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து உக்கடம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.
போலீஸ் விசாரணையில் கடைகளில் விநியோகம் செய்வதற்காக சரக்கு வாகனத்தில் குட்கா பொருள் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. சரக்கு வாகனத்தில் இருந்த மற்றொரு நபரை பிடித்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.