நகராட்சி மறைமுக தேர்தல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

0
550

தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மறைமுக தேர்தலுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வார்டு கவுன்சிலர்கள் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தீர்மானிப்பார்கள்.
1986 ஆம் ஆண்டு முதல் 2001 வரை நேரடி தேர்தல் முறை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மறைமுக தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் ”மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை தமிழக அரசு அறிவித்துள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது” என கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி : ” நகராட்சி பேரூராட்சி பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தினால் அதிமுக, பாஜக கட்சிகள் டெப்பாசிட்டை இழக்கு”ம் என கண்டனம் தெரிவித்துள்ளது.
“உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி அதிமுக அரசு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது கண்டனத்துக்குரியது” என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here