குமரி மாவட்ட குளச்சல் வட்டாரத்தில் நீரோடி வரை ஆழமான கடல்பகுதியாக உள்ளது. இங்கு இன்று கொட்டில்பாடு, கடியபட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடல்நீர்மட்டம் உயர்ந்தது. அலைகள் 10 அடி உயர மணல் திட்டையும் அரித்தன. கடலோர வீடுகள் சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மீனவர்கள் தங்கள் படகுகள், கட்டுமரங்களை பாதுகாப்பாக குளச்சல் துறைமுகப்பகுதிக்கு கொண்டுசென்றனர்.







