கோவையில் கணவர் பிரிந்ததால் இளம்பெண் ஒருவர் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை இடையர்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (68). இவரது மகள் திவ்யா (29). திவ்யா கல்லூரி படிக்கும்பொழுது சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே சந்தோஷ் குமாருக்கும் திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து திவ்யா தனது கணவர் சந்தோஷ் குமாரை பிரிந்து கோவை இடையர் பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களாக திவ்யா தனது திருமண வாழ்க்கை சரியில்லையே என்று மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு தனது அறையில் திவ்யா முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி பேக்கிங் டேப் கொண்டு கழுத்தோடு இறுக்கி கட்டியுள்ளார். தொடர்ந்து மூச்சுத்திணறி சிறிது நேரத்திலேயே திவ்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காலையில் அவரது வெகு நேரமாகியும் அறை கதவை திறக்காததால் அவரது தந்தை மாற்று சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே சென்றார். அப்போது சோபாவில் அமர்ந்த நிலையில் திவ்யா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கொரோனாவால் மனைவி இறந்ததால் கணவர் ஒருவரும் தற்கொலை செய்துுகொண்டார.
கோவை மாவட்டம் அன்னூர் பக்கமுள்ள ஊத்துப் பாளையத்தை சேர்ந்தவர சுப்பிரமணி (59). இவர் அங்கு உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் .
அதிலிருந்து சுப்பிரமணி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.