கோவை ,
அன்னூர் அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ். கூலி தொழிலாளியான இவரது மனைவி நாகமணி ( 30 ). இவர்கள் மாமனார் மாமியாருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
நாகமணியின் மாமனார் செல்வராஜ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மருமகள் நாகமணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தர்மராஜ் ( 35) அன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.