தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த பெருமாள் மகன் நல்லையா. விவசாயி. இவரது மனைவி இவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தை ஊரான வல்லநாட்டுக்கு சென்றுவிட்டார்.
அவரை சமாதானப்படுத்தி அழைத்துவர நல்லையா அங்கு சென்றார். அங்கிருந்த மாப்பிள்ளை சின்னத்துரை அக்கா வீட்டுக்கு வந்த ஆத்திரத்தில் பேச, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சின்னத்துரை தாக்க, நல்லையா படுகாயனடைந்தார். முறப்பநாடு போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து சின்னத்துரையை தேடி வருகின்றனர்.








