தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரம் பகுதியில் சுதாகர் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும்
தோட்டத்தில் இன்று மான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை கண்ட அவர் போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.