நாகப்பட்டினம் வங்கி ஊழியர் ராஜேஷ் தொற்று காரணமாக அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நன்கு தேறிய நிலையில் நேற்று தன் குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.
மதியம் அவர் உரையாடிய சில ஒரு மணி நேரத்திற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையிலிருந்து தகவல் சென்றுள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் பராமரிப்புக்காக இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தான் அவர் இறந்தார் என நோயாளியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினார். ஆனால் தொற்று வீரியத்தால் அவர் இறந்தார் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.










