கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இஞ்சி லோடு ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி பகுதியில் ) வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ சாலை நடுவே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் பிரசாத் லேசான காயமடைந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடுவழியில் இருந்த லோடு ஆட்டோவை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.









