மொட்டை மாடியில் சிகரெட் பிடித்தவர் பலி

0
1220


மதுரை புதூர் சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் செல்வம் 47. இவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here