தொடர் உயிரிழப்புக்கு பின்னரும் தமிழக அரசு மெத்தனம் செல்லூர் ராஜு விளாசல் (வீடியோ)

0
914

மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன்னை செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர் என்று அறிமுகம் செய்துகொண்டே திமுக அரசை விமர்சிக்கிறார்.

வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கொரோனா முதல் அலையில் மிகத் தீவிரமாக இயங்கி மக்களை காப்பாற்றியது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிந்து அவர்களுக்கு கபசுரக் குடிநீர் சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி கரோனிவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

அதேபோன்று ஊரடங்கின்போது மக்களுக்கு தேவையான காய்கறி பழவகைகளை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியது. மதுரையை பொருத்தவரை ஒவ்வொரு வார்டிலும் இதற்காகவே 4 வாகனங்கள் இயங்கின.

ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழக அரசு இத்தனை உயிர் பலிகளுக்கும் பிறகு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த முறை நாங்கள் ஊரடங்கு அறிவித்த போது , மக்கள் இதன் பொருளாதாரச் சுமையை எப்படி தங்குவார்கள் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்.

பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் கரோனா தொற்றிலிருந்தும் மக்களை மீட்க வேண்டும். மக்களும் மிக எச்சரிக்கையாக கவனத்தோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here