ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அரசியல் பிரமுகரான முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும், தொழில் பிரமுகரான ஊர்வசி அமிர்தராஜும் போட்டியிடுகின்றனர்.
முதல் தேர்தல் என்றாலும், முன்களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அமிர்தராஜ். அதனாலோ என்னவோ, இறுதி நாளில் தான் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்தவர் வாக்கியத்துக்கு வாக்கியம் தடுமாறினார். கூட்டணி யையும், கூட்டணிக்கு தலைமை ஏற்ற கட்சியையும் மறந்தவராக குழம்பினார். ஆனாலும், ஒருவழியாக சமாளித்து பேட்டியை நிறைவு செய்தார்.












