தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்ந்து வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்த விமான நிலையத்துக்கு பயணிகள் வரத்து மற்றும் விமான சேவை அதிகரித்து உள்ளது. விரைவில் ஆண்டுக்கு 2 லட்சம் பயணிகள் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020-ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தை 3-ம் நிலை விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்காக விமான நிலையங்களின் ஆணையம் நிதி ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்