தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விண்ணப்பித்திருந்தும் அவர்கள் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மக்களவையில் இதுகுறித்து தூத்துக்குடி எம்பி கனிமொழி காரசாரமாக இன்று விவாதித்தார். தொடர்ந்து உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க கோரிக்கை விடுத்தார்.








