தூத்துக்குடி மாவட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் “தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியாயால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வருவது தான்.
இந்த ஆட்சியில் தப்பித் தவறி ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் சொன்னாலும் அவர்களது அமைச்சர்கள் எங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சொல்லும் மோசமான நிலையில் உள்ளது. ஆகவே இவற்றிற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே ஒரே தீர்வு என்றார்.








