ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சியாச்சின் மலைச் சிகரத்தின் 18 ஆயிரம் அடி உயரத்தில் பனிச்சரிவு ஏற்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிக்கியிருக்கலாம் என கருதப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
நேற்று முழுதும் நடந்த தேடுதலில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.













