மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேலப்பட்டியைச் சேர்ந்தவர் லீலாவதி.
இவருக்கும், அவரது மகன் ஜெயக்குமாருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், சம்பவதன்று
இவரது மகன் ஜெயக்குமார், இவரை சொத்து தகராறில், தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இக் கொலை சம்பவம் தொடர்பாக, பேரையூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.











