கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை, எதிர்கட்சியினரிடம் காசு வாங்கி மோசடி எனக் குற்றஞ்சாட்டி தமது கட்சி தலைவர்கள் இருவருக்கு செருப்பு மாலை அணிவித்து கழுதையில் ஏற்றி ஊர்வலமாக கொண்டுசென்றனர் கட்சி தொண்டர்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகருக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதம் மற்றும் முன்னாள் ராஜஸ்தான் மாநில தலைவர் சீதாராம் ஆகியோருக்குத்தான் இந்த வரவேற்பு.
ஊருக்கு வந்தவர்களை திடீரென சூழ்ந்த கட்சி தொண்டர்கள், கருப்பு மையை பூசி, செருப்பு மாலை அணிவித்து, கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று (அவ)மரியாதை செய்தனர்.















