அயோத்தி பாபர் மசூதி தொடர்பான 14 மேல் முறையீட்டு மனு மற்றும் புதிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறும் நிலையில் தினந்தோறும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 17ஆம்தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.













