தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் பலத்த மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரும் 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.













