மகனுடன் பைக்கில் சென்ற தாயை பலிகொண்ட சாலை

0
502

அம்பை அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கோமதி (வயது56). இவர்களது மகன் கண்ணதாசன். கடந்த 13-ந்தேதி உறவினர் வீட்டுக்கு சென்ற கோமதி, அங்கிருந்து மகன் கண்ணதாசனுடன் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது குண்டும், குழியுமான சாலையில் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்ததால் பின்னால் அமர்ந்திருந்த கோமதி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கோமதியை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று கோமதி பரிதாபமாக இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here