திருப்பதிசாரம் வடக்கு நாஞ்சில்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தார். சம்பவத்தன்று முருகன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதில் மனவேதனையுடன் முருகன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.








