தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில முத்து கண்ணன் மற்றும் விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புளியங்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற வாலிபர் தற்போது உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.










