விழுப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். சமீபத்தில் நடந்த கொலை தொடர்பாக அவரை போலீசார் தேடிவந்தனர்.
அவர் சென்னை கொட்ரட்டூரில் இருப்பதாக தகவல் அறிந்து விழுப்புரம் போலீசார் அங்கு வந்தனர். அவரை பிடிக்க முயன்றபோது அவர் உதவி காவல் ஆய்வாளரை தாக்கி தப்பியோட முனைந்ததால் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
மணிகண்டன் தாக்கியதால் காயமடைந்ததாக உதவி காவல் ஆய்வாளர்கள் பிரபு, பிரகாஷ் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.















