பி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு

0
1006

2018-19 நிதியாண்டுக்கான பி.எஃப் ஆண்டு வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் அறிவித்தார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்று பி.எப். டிரஸ்டின் உறுப்பினர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவர்கள் விருப்பப்படி வட்டி விகிதம் 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பி.எஃப். வட்டி உயர்வுத் தீர்மானம் மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த உயர்வு அமலுக்கு வரும். இந்த உயர்வு 2018 – 2019 நிதியாண்டில் இருந்து அமலுக்கு வரும்.

இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள். வட்டி விகிதத்தினை உயர்த்துவதற்கு கடந்த பிப்ரவரி மாதமே தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்த நிலையில், நிதியமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் வட்டி உயர்வை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக மத்திய மந்திரி சந்தோஷ் கங்வார் கூறினார். மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் 6 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

2017-2018ஆம் ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் அமலில் இருந்த மிக குறைவான வட்டி விகிதம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here