அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, ‘அவர் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் 20 வங்கிகளில் 317 கணக்குகள் இருக்கின்றன. ரூ.200 கோடி வரை முறையற்ற பரிவர்த்தனை நடந்திருக்கிறது. ரூ.800 கோடி வரை பினாமி சொத்துக்கள் உள்ளன’ என அமலாக்கத்துறை தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு தந்தையுடன் சென்றபோது ஹவாலா பணப் பரிவர்த்தனை நடந்ததா என நேற்று முன்தினம் அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்













