ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், நிதியமைச்சராக இருந்தபோது அவர் உதவியாளராக இருந்த பெருமாளிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. பெருமாள் தற்போது டெல்லியில் வசித்துவருகிறார். அவரிடம் விசாரித்ததுபோல், அப்போது நிதியமைச்சகத்தில் பணிபுரிந்த சில அதிகாரிகளிடமும் விசாரணை நடக்கிறது.















