தலாய்லாமாவை கொல்ல திட்டம் தீட்டியதாக சென்னை நீலாங்கரையில் ஷேக் அசத்துல்லா என்ற இளைஞர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைதுசெய்யப்பட்டார். இவர் வங்க தேசத்தை மையமாக கொண்டு இயங்கும் ஜமாஅத் அல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கட்டட தொழிலாளி போல் 10 மாதங்களாக அவர் பதுங்கி வாழ்ந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.














