
இந்தியன் ரிசர்வ் வங்கிடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 5,000 கோடி ரூபாய் உயர்த்தியது. இதனால் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
மேலும், ‘நடப்பு நிதியாண்டில் பங்கு மூலதனத்தை, 300 கோடி ரூபாய் வரை உயர்த்த வங்கியின் வாரிய உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர்.இதற்கான உரிய வழிகளில் பங்கு மூலதனத்தை உயர்த்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என வங்கி சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












