மதுரை கேகே புதூரில் உள்ளது லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி. இங்கு காந்திநகரை சேர்ந்த முத்த் உமகள் அர்ச்சனா பிளஸ் 1 படித்துவந்தார். கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாத மாணவி, இன்று காலை 8.30 மணிக்கு பிற மாணவிகள் வருமுன்பே சென்றுள்ளார்.
தனது வகுப்பறைக்கு சென்ற மாணவி அங்கு தனது தாயாரின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிலிருந்தே தற்கொலை முடிவுடன் அவர் வந்திருக்கிறார்.
பள்ளியிலிருந்து இறந்த மாணவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுயன்ற போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு கூறி நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர்.














