சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக இருப்பவர் விக்ராந்த். இவரது தாயார் ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் வசித்து வந்தார். நேற்று பகலில் அவர் தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு டிஐஜி சந்தோஷ் ஹதிமனி உத்தரவிட்ட நிலையில் தீவிரமாக போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் பேய்குளம் அருகே உள்ள மீரான் குலத்தைச் சேர்ந்த செல்வ ரதி (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. அங்கிருந்து ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது. அவர் வீட்டு அருகிலேயே ஒரு சில சம்பவங்களை நடத்தியுள்ளார். ஆனாலும் புகார் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தன் சொந்த ஊரான தேரிப்பனையில் உள்ள விக்ராந்தின் தாய் வசந்தா வீட்டிற்கு செல்வரதி சென்றதோடு, தூங்கிக் கொண்டிருந்த அவரது கழுத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்து . ‘காதில் கழுத்தில் கிடந்த சுமார் ஏழு பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு நேராக மீரான் குளம் வந்துள்ளார். அங்கு அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்பு ஓய்வு பெற்ற மூதாட்டியை தள்ளி கொலை செய்தது, அல்வா கடைக்காரர் மகளிடம் நகையைத் திருடியது போன்ற சம்பவங்கள் இப்போது வெளிவந்துள்ளன. அது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.