நெல்லையில் உள்ள ஜல் நீட் அகாடமி உரிமையாளர் அங்கு பயிலும் மாணவர்களை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அகாடமி உரிமையாளர் செயலில் மிகவும் கண்டனத்துக்கு உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நெல்லை ஜல் நீட் அகாடமியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கேட்டு அறிந்ததோடு, உடலில் ஏற்பட்ட காயங்களையும் பார்வையிட்டார்.









