தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் காெண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பள்ளி விடும் நேரத்தில் மாணவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததால் அந்த மாணவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









