விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்று வட்டார பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஏரல் தாமரபரணி ஆற்றில் இன்று கரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். எனினும், தினமும் மக்கள் குளிக்கும் ஏரல் ஆற்றில் இவ்வளவு சிலைகளை கரைப்பதால் நிச்சயம் தண்ணீரின் தன்மை மாசுபடும். இதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.








