தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொது மருத்துவம், வைட்டமின் குறைபாடு, சர்க்கரை நோய், இரத்த நோய், கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவை குறித்து பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.









