குலசேகரன் பட்டினம் பகுதியை சேர்ந்த சண்முகம் (49) என்பவர் முத்தாரம்மன் கோவிலில் கார் டிரைவர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி விட்டனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









