கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) போலீசார் ரோந்துக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த இருவர் போலீசாரை அவதூறாக பேசி கீழே தள்ளி கம்பால் தாக்க முயன்றனர். இதுகுறித்து விசாரித்த போலீசார் அதில் ஒருவன் 16 வயது சிறுவன் எனவும், மற்றொருவர் இருளாண்டி (62) எனவும் தெரியவந்தது. அவர்கள் 20 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.








