ஏரலில் இம்மாதம் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரு தினங்களில் “உங்கள் ஊரில் திட்டம் முகாம்” நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 21ம் தேதி அன்று பெற்றுக் கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்ற அறிவிப்பால் இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.









